முந்தய பக்கம்

உகுனியம், நகலூருக்கு பேருந்து விட வலியுறுத்தல்

14 Dec 2025, 3:45 pm
உகுனியம், நகலூருக்கு பேருந்து விட வலியுறுத்தல்
<p><strong>உகுனியம், நகலூருக்கு பேருந்து விட வலியுறுத்தல்</strong></p> <p>ஈரோடு, டிச.14- கடம்பூர் மலைப்பகுதிக்குட்பட்ட உகுனி யம் மற்றும் நகலூர் பகுதிக்கு பேருந்து வசதி &nbsp;செய்து கொடுக்க வேண்டுமென வாலிபர் சங்கம் &nbsp;வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் &nbsp;ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலை வட்டாரக்கமிட்டி &nbsp;மாநாடு கடம்பூரில், தலைவர் பசவராஜ் தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், துணைத்தலைவர் ஷ்யாம் பிரவீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.துரைசாமி வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், கடம்பூர் &nbsp;மலையிலிருந்து 7 கிமீ தொலைவில் உகுனி யம் என்ற மலை கிராமம் உள்ளது. இது யானை &nbsp;உள்ளிட்ட விலங்குகள் நிறைந்த பகுதியாகும். &nbsp;இங்கு முறையான சாலை வசதி இல்லை. &nbsp;எனவே, போக்குவரத்து வசதியும் இல்லை. &nbsp;சுமார் 100 குடும்பத்தினர் வசிக்கும் இப்பகுதிக்கு &nbsp;சாலை அமைத்து பேருந்து அல்லது சிற்றுந்து &nbsp;வசதி கொடுக்க வேண்டும். மேலும், சாலை &nbsp;அமைக்கப்பட்டுள்ள நகலூர் பகுதிக்கும் அரசு &nbsp;பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் &nbsp;என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சங்கத்தின் கமிட்டித் தலைவராக &nbsp;பசவராஜ், செயலாளராக லெனின், பொருளாள ராக சஞ்சீவ் உள்ளிட்ட 13 பேர் கொண்ட கமிட்டி &nbsp;தேர்வு செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram