கிராம சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>கிராம சாலையை சீரமைக்க வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, பிப். 20- பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை யில் உள்ள வேப்பிலை அள்ளி கிராம சாலையை சீர மைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென் னாகரம் வட்டம் பாப்பாரப் பட்டி அருகே உள்ள வேப்பிலை அள்ளி கிராமத்த்துக்கு செல்லும் தார்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. பாப்பாரப்பட்டியிலிருந்து மோர் வள்ளி வழியாக வேப்பிலை அள்ளி நலப்பநாயக் கன அள்ளி, மலையூர் அடிவாரம் ஆகிய பகுதி களை இணைக்கும் ஊரக சாலையாக உள்ள இந்த தார் சாலை இரண்டு கிமீ தூரத்துக்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண்சாலை போல் மாறிவிட்டது. பழுதடைந்த இந்த சாலையை தார் சாலையாக புதுப்பிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இப்பகுதியினர் வலியுறுத்து கின்றனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகை யில், கிராமத்திலிருந்து செல்லும் பள்ளி, கல் லூரி வாகனங்கள், விவசாய தேவைக்கான வாகனங்கள், செங்கல் சூளை வாகனங்கள், கார், டூவீலர் மற்றும் கட்டுமானப்பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை சென்று வர முடியாமல் இப்பகுதி மக்கள் மிக வும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த தார் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர்.</p>
