முந்தய பக்கம்

சுவர் விளம்பரங்களை அகற்ற வலியுறுத்தல்

17 Mar 2026, 3:26 pm
சுவர் விளம்பரங்களை அகற்ற வலியுறுத்தல்
<p><strong>சுவர் விளம்பரங்களை அகற்ற வலியுறுத்தல்</strong></p> <p>உதகை, மார்ச் 17- உதகையில் சாலையோரம் மற்றும் பொது இடங்களிலுள்ள சுவர்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் தற்போது வரை அழிக்கப்படாமல் உள்ளதால், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக நடை பெறும் என இந்திய தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத் தின் எல்லைப்பகுதிகளில் உள்ள சோத னைச்சாவடிகள் மற்றும் நகர் பகுதிக ளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வரு கின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களின் உருவச்சிலைகளும் மறைக்கப்பட்டுள்ளன. மேலும், நகர் &nbsp;பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் &nbsp;சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் &nbsp;பேனர்கள் அகற்றும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், உதகையில் அதிமுக, தவெக, நாம் தமி ழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சுவர் &nbsp;விளம்பரங்கள் தற்போது வரை அழிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை சுவர்களிலும், உதகை அருகே மூன்றாவது மாற்றுப்பாதையாக அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் சாலையோரம் உள்ள சுவர் களில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங் கள் அழிக்கப்படாமல் உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவித்து மூன்று &nbsp;நாட்களாகியும், மாவட்டத்தின் பல் வேறு இடங்களில் சாலையோரங்களில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் தற்போது வரை அழிக்கப்படாமல் உள்ளன. எனவே, மாவட்ட தேர்தல் &nbsp;அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி அரசியல் விளம்பரங் களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந் துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram