நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம்</strong></p>
<p>அனைத்து பணியாளர்கள் சார்பில் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு கால வரையறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் செவ்வாயன்று (ஜன.6), ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத் தலைவர் எசேக்கியேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வனிதா, மாவட்ட பொருளாளர் திலகவதி, மாநில செயற்குழு நிர்வாகிகள் சீனிவாசன், நாகராஜ், மலர்விழி, சங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
