முந்தய பக்கம்

உ.பி: நீட் மறுதேர்வு எழுதிய மாணவி தற்கொலை!

4 hours before
உ.பி: நீட் மறுதேர்வு எழுதிய மாணவி தற்கொலை!
<p>நீட் மறுதேர்வை எழுதிய சில நாட்களிலேயே, உத்தரப் பிரதேசத்தில் சஞ்சல் பாரதி என்ற 19 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>உத்தரப் பிரதேசத்தின் சௌபாரியா கஞ்சன்புரா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சல் பாரதி கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடந்த நீட் மறுதேர்வை எழுதியுள்ளார். அவர் நேற்று ​​வீட்டில் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்ட அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>இது குறித்து தகவல் அறிந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நீட் மறுதேர்வை எழுதிய பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். மாணவி தற்கொலை செய்துகொண்ட இடத்திலிருந்து நீட் வினாத்தாள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் &quot;என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, என் சகோதரா&quot; என்று எழுதப்பட்டிருந்ததாகவும், அந்த தற்கொலை குறிப்பு கையெழுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கோட்வாலி காவல் நிலைய அதிகாரி (SHO) நிர்பய் சிங் தெரிவித்துள்ளார். மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram