உ.பி.,யில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலி
29 May 2026, 8:12 pm
<p><strong>உ.பி.,யில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலி</strong> </p><p>உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் வியாழனன்று நள்ளிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பெட்வா ஆற்றின் குறுக்கே கட்டுமானத்தில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். </p><p>உயிரிழந்தவர்கள் லோகேந்திரா (22), குல்தீப் நிஷாத் (19), சவந்த் யாதவ் (28), சபாஜீத் (30), புஷ்பேந்திர சவுகான் (34) மற்றும் ராஜேஷ் பால் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>இந்த கோர விபத்து தொடர்பாக ஹமிர்பூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் கூறுகையில், “தொழி லாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, ஸ்லாப்களில் ஒன்று அவர்கள் மீது சரிந்து விழுந்ததே விபத்துக்கு காரணம் ஆகும். </p><p>ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் மீட்புப் பணியில் எந்த சிக்கலும் இல்லை” என அவர் கூறினார்.</p>
