கன்வார் யாத்திரைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த உ.பி., பாஜக அரசு
yesterday
<p><strong>கன்வார் யாத்திரைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த உ.பி., பாஜக அரசு</strong></p><p><strong>கல்வியாளர்கள் கண்டனம்</strong></p><p>வட இந்தியாவில் சாதுர்மாஸ் (ஆவணி/ஆடி) மாதத்தில் ஆண்டுதோறும் சிவனை வழி</p><p>படும் மக்கள் கால்நடையாக சென்று கங்கைஉள்ளிட்ட நதிகளில் நீர் எடுக்க யாத்திரை மேற்கொள்வார்கள். இது கன்வார் யாத்திரை என அழைக்கப்படும். இந்நிலையில், இந்த கன்வார் யாத்திரைக்காக காசியாபாத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 12 வரை விடுமுறை அறிவித்துள்ளது உத்தரப்பிரதேசபாஜக அரசு. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,“உத்தரகண்டில் இருந்து காசியாபாத் மற்றும் அதன் வழியாக கன்வாரியர்கள் பெருமளவில் வருவதால்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 12 வரை அனைத்துபள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல கன்வாரியர்களின் நலன் என்ற பெயரில் தில்லி-மீரட் சாலையும் ஆகஸ்ட் 12 வரை மூடப்பட்டிருக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கன்வார் யாத்திரைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த உத்தரப்பிரதேச பாஜக அரசின் நடவடிக்கைக்குகல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p><br></p>
