பாஜக ஆளும் உ.பி.,யில் 289 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
14 Jul 2026, 9:15 pm
<p><strong>பாஜக ஆளும் உ.பி.,யில் 289 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை</strong> </p><p>ஒருவர் குற்றம் செய்தால் அவரை கைது செய்து, சட்டத்தின்படி நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை பெற்றுத் தருவதே அர சாங்கம் மற்றும் காவல்துறையின் பணி ஆகும். </p><p>ஆனால் பாஜக ஆளும் மாநிலங்க ளில் நிலைமை அப்படி அல்ல. சட்டம் - ஒழுங்கை கையாள தெரியாமலும், அதுதொடர்பான விமர்சனங்களை மறைக்கவும் குற்றவாளிகளை என் கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லும் அடாவடி செயல்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. </p><p>கோரக்பூர் மடத்தின் சாமியார் ஆதித்யநாத் முதல மைச்சராக இருக்கும் உத்தரப்பிர தேசத்தில் என்கவுண்டர் என்பது சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது. </p><p>அம்மாநில அரசாங்க புள்ளி விவ ரங்களின்படி, ஆதித்யநாத் முதல மைச்சரான கடந்த 9 ஆண்டுகளில் உத்த ரப்பிரதேசத்தில் 17,043 என்கவுண்டர் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் 289 பேர் கொல்லப்பட்டுள்ளனர். </p><p>11,834 பேர் காயமடைந்துள்ளனர். குற்றவாளிகளின் தாக்குதலில் 18 காவல்துறையினர் உயிரி ழந்துள்ளனர் என எதில் கூறப் பட்டுள்ளது.</p>
