உ.பி. கணினி பயிற்சி மையத்தில் தீ விபத்து : மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான துயரம்!
yesterday
<p><strong>உ.பி. கணினி பயிற்சி மையத்தில் தீ விபத்து : மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான துயரம்!</strong></p><p>லக்னோ, ஜூன் 22 - உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 15 பேர் உடல் கருகி பலியாகினர். </p><p>உத்தரப்பிரதேச மாநிலம் வட மேற்கு லக்னோவின் அலிகஞ்ச் பகுதி யில் உள்ள உஷா மேத்தா மார்க்கில் கணினி பயிற்சி மையம் ஒன்று உள்ளது. இங்கு மின்கசிவு காரணமாக திங்களன்று பிற்பகல் 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டட த்தின் மேல் தளத்தில் முதலில் தீப்பிடித்து, பின்னர் அது மற்ற இடங்களுக்கும் பரவியது. தகவல றிந்ததும் காவல்துறை, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். </p><p>இருப்பினும் தீ கட்டடம் முழு வதும் பரவியது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் சிலர் மாணவர்கள் என்று கூறப்படு கிறது.</p>
