தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

29 Dec 2025, 8:06 am
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
<p>உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.<br /> கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு 2019 ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.<br /> கடந்த வாரம் தில்லி உயர்நீதிமன்றம் குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து அவரருக்கு ஜாமீன் வழங்கியது.<br /> இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, செங்காருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செங்கார் சிறையிலிருந்து வெளியே விடப்படக்கூடாது என தெளிவுபடுத்தியது.<br /> பொதுவாக ஜாமீன் அல்லது விடுதலை உத்தரவுகள் இடைநிறுத்தப்படுவதில்லை என்றாலும், தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக இவ்வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.