முந்தய பக்கம்

சதீஷ் ஆச்சார்யாவின் இரு கார்ட்டூங்களை நீக்க மோடி அரசு முயற்சி!

10 Mar 2026, 1:22 pm
சதீஷ் ஆச்சார்யாவின் இரு கார்ட்டூங்களை நீக்க மோடி அரசு முயற்சி!
<p>பிரதமர் மோடியை விமர்சிக்கும், தனது இரண்டு கார்ட்டூன்களை நீக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.<br /> இது குறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது:<br /> &quot;எனது இரண்டு கார்ட்டூன்களை நீக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது என எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடந்த மூன்று நாட்களில் இரண்டு முறை எச்சரிக்கை செய்தி வந்துள்ளது.<br /> எனது 15 ஆண்டு கால சமூக ஊடக அனுபவத்தில், எப்போதெல்லாம் ஒரு அரசாங்கமோ அல்லது அரசியல்வாதியோ ஒரு கார்ட்டூனை வலுக்கட்டாயமாக தடுக்க முயற்சிக்கும்போதெல்லாம், அந்த கார்ட்டூன் பொதுவாக பத்து மடங்கு அதிகமான வாசகர்களைச் சென்றடைகிறது என்பதை அறிந்திருக்கிறேன்!&quot; இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram