சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில் ஒன்றிய அரசின் தலையீடு! - தமுஎகச கண்டனம்!
19 Dec 2025, 9:49 am
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-family:"Latha",sans-serif">சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில்</span> <span style="font-family:"Nirmala UI",sans-serif">தலையிடும்</span><span dir="ltr" lang="TA" style="font-family:"Latha",sans-serif"> ஒன்றிய</span> <span style="font-family:"Nirmala UI",sans-serif">பாஜக அரசிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.</span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-family:"Nirmala UI",sans-serif">இதுகுறித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:</span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-family:"Latha",sans-serif">சாகித்ய அகாதமி நிறுவனத்தால் இந்தியாவில் உள்ள 24 மொழிகளின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்குரிய விருதுப் பட்டியலை அந்தந்த மொழியைச் சேர்ந்த சாகித்ய அகாதமி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுயேட்சையான குழு தேர்வு செய்து வெளியிடும்.</span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-family:"Latha",sans-serif">இந்த ஆண்டும் அதே போல் 24 மொழிகளின் குழுக்களும் தங்கள் தேர்வுப் பட்டியலை தயார் செய்துவிட்டன. அதன் அடிப்படையில் நேற்று 18.12.2025 மாலை 3 மணிக்கு </span><span style="font-family:"Nirmala UI",sans-serif">தி</span><span dir="ltr" lang="TA" style="font-family:"Latha",sans-serif">ல்லியில் நடைபெற இருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விருது அறிவிப்பு வெளியாகும் என்று இருந்தது. நாடு முழுக்க உள்ள இலக்கிய ஆர்வாளர்கள் சாகித்ய அகாதமி விருதுப் பட்டியலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.</span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-family:"Latha",sans-serif">இந்தச் சூழலில் திடீரென்று அந்தச் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சாகித்ய அகாதமி குழுக்களின் தேர்வுகளில் ஒன்றிய அரசின் அமைச்சகம் தலையீடு உள்ளதாக செய்திகள் வருகின்றன. இது சாகித்ய அகாதமி எனும் நிறுவனத்தின் சுயேட்சையான செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இது போன்ற நேரத்தில் சாகித்ய அகாதமி நிறுவனம் தனது தன்னாட்சி அதிகாரத்தை காத்திட உறுதியோடு செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.</span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-family:"Latha",sans-serif">இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களையும் கைப்பற்றும் அரசியல் வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதைப்போல சாகித்ய அகாதமி நிறுவனத்தின் சுயேட்சையான செயல்பாட்டை முடக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டிக்கிறது. அனைத்து மொழிகளின் குழுக்களும் தேர்வு செய்த விருத்தாளர்களின் பட்டியலை எந்தத் திருத்தமும் இல்லாமல் வெளியிடும் அதே முறையை இந்த ஆண்டும்</span>, <span dir="ltr" lang="TA" style="font-family:"Latha",sans-serif">இனி வரும் ஆண்டுகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமுஎகச கேட்டுக் கொள்கிறது.</span></span></span></p>
