முந்தய பக்கம்

‘ஜெல்லி-1’ மருந்துகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு

2 Apr 2026, 5:30 am
‘ஜெல்லி-1’ மருந்துகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு
<p><strong>‘ஜெல்லி-1’ மருந்துகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு</strong></p><p>பட் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனைச் சரி செய்ய ‘ஜெல்லி-1’ (GLP-1) மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய சந்தையில் சமீபகாலமாக இந்த ஜெல்லி-1 மருந்துகள் பல்வேறு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>தற்போது மருந்தகங்கள், ஆன்லைன் தளங்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி ஜெல்லி-1 எளிதாகக் கிடைப்பது கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு மருந்து தயாரிப்பு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>இந்நிலையில், ஜெல்லி-1 மருந்துகளுக்கு ஒன்றிய அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதில், ‘ஜெல்லி-1’ மருந்துகள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இவை கடுமையான கண்காணிப்புக்குக் கொண்டுவரப்படும்.</p><p>தகுதியற்ற மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும், அபராதம் விதிக்கப்படும் மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram