தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வே வருவாய் தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுப்பு - ஜான் பிரிட்டாஸ் கடும் கண்டனம்!

28 Mar 2026, 11:30 am
ரயில்வே வருவாய் தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுப்பு - ஜான் பிரிட்டாஸ் கடும் கண்டனம்!
<p>ரயில்களில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டணங்களின் மூலம் கிடைத்த வருவாய் தொடர்பான தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுத்துள்ளது.<br /> மாநிலங்களவையில் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ரயில்களில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டணங்களின் மூலம் கிடைத்த வருவாய் குறித்த விவரங்கள் குறித்து கேள்வியெழுப்பினார்.<br /> அவரது கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே வருவாய் தகவல்களை வழங்க முடியாது என பதிலளித்தார்.<br /> இதுகுறித்து ஜான் பிரிட்டாஸ் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;<br /> 2023-ஆம் ஆண்டில், ஃபிளெக்ஸி ஃபேர், தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் ஆகியவற்றின் மூலம் பயணிகளிடமிருந்து கூடுதலாக ரூ.12,128 கோடி வசூலித்ததாக ரயில்வே ஒப்புக்கொண்டது. அதே சமயம், ரத்து கட்டணம் உள்ளிட்ட 5 5 [Miscellaneous Coaching Receipts) என்ற பெயரின் கீழ் மேலும் ரூ.7,674.63 கோடி வசூலிக்கப்பட்டதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /> தற்போது 2026-இல், புதுப்பிக்கப்பட்ட புள்ளி விவரங்களைக் கேட்டபோது, இந்தத் தரவுகள் &#39;ஒட்டுமொத்த வருவாய்க் குழுவின் ஒரு பகுதி எனக் கூறி, தகவல்களை வெளியிட அரசு மறுக்கிறது.<br /> நாடாளுமன்றப் பொறுப்புடைமையை மிகவும் சாதுரியமாக தவிர்க்கும் நிகழ்வுகளின் தொகுப்பை யாராவது உருவாக்கினால், இன்றைய பதில் நிச்சயமாக அதில் ஒரு சிறந்த உதாரணமாக இடம்பெறத் தகுதியானது. ஏன் இந்த ரகசியம்? என்ன மறைக்கப்படுகிறது? என கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.