தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மறைமுக நடவடிக்கைகள் மூலம் ரயில் கட்டணத்தை உயர்த்தும் ஒன்றிய அரசு

26 Dec 2025, 3:44 pm
மறைமுக நடவடிக்கைகள் மூலம் ரயில் கட்டணத்தை உயர்த்தும் ஒன்றிய அரசு
<p><strong>மறைமுக நடவடிக்கைகள் மூலம் ரயில் கட்டணத்தை உயர்த்தும் ஒன்றிய அரசு</strong></p> <p>சு.வெங்கடேசன் &nbsp;எம்.பி., &nbsp;கண்டனம் மதுரை, டிச.26 - மறைமுக நடவ டிக்கைகள் மூலம் ஒன்றிய பாஜக அரசு &nbsp;ரயில் கட்டணங்களை உயர்த்தி வரு கிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் நூறு &nbsp;கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரயில் &nbsp;பயணத்தை தவித்துள்ளனர். இந்நிலை யில், மீண்டும் கட்டண உயர்வு என்பது &nbsp;நியாயமற்றது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மோடி அரசு ரயில் கட்டணங் களை உயர்த்தி உள்ளது. 2014-க்கு பிறகு இப்போது தான் கட்டணத்தை உயர்த்துவதாகவும், இது ஒன்றும் தவறில்லை என்றும் கூறப்படுகிறது. சிலர் படிப்படியாக கட்டணங்களை உயர்த்தினால் பிரச்சனை இல்லை என்று கருதுகிறார்கள். &nbsp;உண்மையில் ரயில்வேயில் கட்டண உயர்வே இல்லையா என்ற &nbsp;கேள்வி எழுகிறது. நடப்பது என்ன? &nbsp;கட்டண உயர்வு பல மறைமுக நடவ டிக்கைகள் மூலம் செயல்படுத்தப் பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பானது உதாரணமாக சிறப்பு ரயில் சிறப்பு &nbsp;கட்டணம், தட்கல், தட்கல் பிரிமியம் பயண ரத்து கட்டணம் போன்ற வகை களில் கட்டணங்களை விமான கட்டண அளவுக்கு உயர்த்தி உள்ளார்கள். வந்தே பாரத் போன்ற வண்டிகளில் கட்டணம் கண்மூடித்தனமாக உயர்த் தப்பட்டுள்ளது. அப்படி இருக்க கட்டண உயர்வே இல்லை என்பது உண்மைக்கு புறம்பானது. &nbsp;சாலைக்கு துரத்தப்பட்ட மக்கள் இவற்றின் காரணமாக 2014-15-க்கு பிறகு 2023-24 காலக் கட்டத்தில் 132 கோடி பயணிகள் ஓர் ஆண்டு பய ணத்தை தவிர்த்துள்ளார்கள். அவர் களை மோடி அரசு சாலைக்கு துரத்தி யுள்ளது. 2014-15 இல் 822 கோடி பயணி கள் பயணம் செய்தார்கள். 2023-24இல் &nbsp;690 கோடியாக அது குறைந்துவிட்டது. &nbsp;இது கட்டண உயர்வின் மூலமாகத் தான். மூத்த குடிமக்களுக்கான பயண &nbsp;கட்டணச் சலுகையை ரத்து செய்ததன் &nbsp;மூலமாக 6 கோடி மூத்த குடிமக்கள் பய ணத்தை தவிர்த்து உள்ளனர். இப்படி எல்லோரையும் மோடி அரசு தேச நல னுக்கு விரோதமாக, விபத்துக்கள் நிறைந்த, மாசு நிறைந்த சாலைக்கு துரத்தி உள்ளது. சாதாரண இரண்டாம் வகுப்பு ரயில்கள் 4702 வண்டிகள் 2014-15 இல் இயக்கப்பட்டன. அதுவே 2023- 24இல் 3313 ஆக குறைந்துவிட்டது. அதாவது 1389 சாதாரண வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சாதாரண மக்கள் சாலைக்கு துரத்தப்பட்டுள்ளனர். &nbsp;இப்படி மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பயணிகளை ரயிலில் இருந்து சாலைக்கு துரத்திவிட்டு மீண்டும் கட்டணத்தை உயர்த்துவதில் நியாயம் இல்லை. அது மட்டுமல்ல, பயணிகள் குறைந்தாலும் வருமானம் அதிகரித்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். வருமானம் 2014-15 இல் ரூ.42,189 கோடியாக இருந்தது; 2023-24இல் ரூ.70,693 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் அர்த்தம் குறைந்த பயணி களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது என்பதுதான். எனவே இந்த &nbsp;கட்டண உயர்வு நியாயமற்றது. இது &nbsp;கைவிடப்பட வேண்டுமென தெரி வித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.