தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெளியுறவுக் கொள்கையில் முற்றிலும் சமரசம் செய்துகொண்ட மோடி அரசு! - முதல்வர் ஸ்டாலின்

6 Mar 2026, 12:21 pm
வெளியுறவுக் கொள்கையில் முற்றிலும் சமரசம் செய்துகொண்ட மோடி அரசு! - முதல்வர் ஸ்டாலின்
<p>ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அளித்த விவகாரம் தொடர்பாக விமர்சித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுக் கொள்கையில் மோடி அரசு முற்றிலும் சமரசம் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.<br /> இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:<br /> &quot;ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு மட்டும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் என அமெரிக்கா முடிவு செய்கிறது. இது, அடிப்படையாகவே ஒரு கேள்வியை எழுப்புகிறது. இந்தியா தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?<br /> இந்தியா நடத்திய சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற ஆயுதம் ஏந்தாத ஈரானிய போர்க்கப்பலான IRIS தேனாவை அமெரிக்கா மூழ்கடித்தது கவலை அளிக்கிறது. இந்தியாவின் அழைப்பின் பேரில் வந்த ஒரு பன்னாட்டு கப்பலை மூழ்கடிக்கப்பட்டதற்கு இந்தியா அமைதியாகவோ அல்லது செயலற்றதாகவோ தோன்றக்கூடாது.<br /> இந்தியாவின் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையில் ஒன்றிய பாஜக அரசு முற்றிலும் சமரசம் செய்துகொண்டுள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம், இறையாண்மை, நாட்டு நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.&quot; இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.