தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காசாவில் இடிபாடுகளை அகற்றுவதால் இஸ்ரேலின் 'கொடிய குற்றங்களுக்கான' ஆதாரங்கள் அழியும் அபாயம் உள்ளது – ஐ.நா. சிறப்பு அதிகாரி எச்சரிக்கை

7 Sept 2026, 9:03 pm
காசாவில் இடிபாடுகளை அகற்றுவதால் இஸ்ரேலின் 'கொடிய குற்றங்களுக்கான' ஆதாரங்கள் அழியும் அபாயம் உள்ளது – ஐ.நா. சிறப்பு அதிகாரி எச்சரிக்கை
<p>இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவின் சில பகுதிகளில் பெரிய அளவில் இடிபாடுகளை அகற்றுவது, இஸ்ரேல் செய்த &#39;கொடிய குற்றங்களுக்கான&#39; (Atrocity Crimes) ஆதாரங்களை அழிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும், மனித உடல்களை மீட்பது மற்றும் அடையாளம் காண்பதைத் தடுப்பதாகவும் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரி எச்சரித்துள்ளார்.</p><p>பாலஸ்தீனப் பகுதிகளுக்கான ஐ.நா. சிறப்பு அதிகாரி பிரான்செஸ்கா அல்பனீஸ் வெளியிட்ட அறிக்கையில், காசாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இடிபாடுகளை அகற்றுதல், நொறுக்குதல் மற்றும் வேறு இடத்திற்கு மாற்றுதல் ஆகிய நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>காசாவின் இடிபாடுகளுக்குள் மனித எச்சங்களும், இனப்படுகொலை உட்பட சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குத் தேவையான முக்கியப் பொருள்சார் ஆதாரங்களும் புதைந்துள்ளன.</p><p>காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களின் உடல்கள் இன்னும் புதைந்து கிடப்பதாக பாலஸ்தீன அதிகாரிகளின் மதிப்பீடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியைச் சர்வதேசக் குற்றவியல் புலனாய்வாளர்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இது ஒரு குற்றச் சம்பவ இடம், ஒரு கல்லறை; இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற கொடூரமான குண்டுவீச்சின் தடயங்களை கொண்டுள்ளது என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.