முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

24 Jun 2026, 8:44 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>ஐ.நா விசாரணை ஆணைய தலைவர் முரளிதர்</strong></p><p>பாலஸ்தீனக் குழந்தைகள் இஸ்ரேல் ராணுவத்தால் வேண்டுமென்றே கொல்லப்பட்டனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. 2025 அக்டோபர் மாதம் போர்நிறுத்தம் ஏற்பட்ட பின்னரும் கூட, இஸ்ரேலால் குழந்தைகள் தொடர்ந்து கொல்லப்படுவதும் படுகாயமடைவதும் நிகழ்ந்து வருகிறது.</p><p><strong>பத்திரிகையாளர் ராணா அய்யூப்</strong></p><p>பயிற்சி மையங்களிலும் மருத்துவமனைத் தீ விபத்துகளிலும் குழந்தைகள் உயிரிழக்கிறார்கள். பாஜகவின் முதலமைச்சர் மீது பெரும் நில அபகரிப்புப் புகார் உள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால், இந்தியப் பிரதமரோ தன்னை விமர்சிப்பவர்களைக் கேலி செய்கிறார்.</p><p><strong>பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்</strong></p><p>ராமர் கோவில் நிதி முறைகேடு பற்றி கேள்விகள் கேட்பது ‘அயோத்தியை அவமதிக்கும் செயல்’ என்று உ.பி முதல்வர் கூறுகிறார். ஆனால், கோவில் கட்டுமானக் குழுவின் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா இதனை ‘வெளிப்படையான கொள்ளை’ என்று குறிப்பிடுகிறார்.</p><p><strong>பத்திரிகையாளர் முகமது ஜுபைர்</strong></p><p>பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால், கொல்கத்தாவில் ‘ரெட் ரோடு’ 7 நாட்களுக்கு மூடப்படுகிறது. இதே சாலையில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் எனக்கூறி ஈத் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram