ஒன்றியத்தில் விண்ணப்பித்தோருக்கு பட்டா, வீடு வழங்க உடுமலை விவசாயத் தொழிலாளர் மாநாடு வலியுறுத்தல்
23 Dec 2025, 4:05 pm
<p><strong>ஒன்றியத்தில் விண்ணப்பித்தோருக்கு பட்டா, வீடு வழங்க உடுமலை விவசாயத் தொழிலாளர் மாநாடு வலியுறுத்தல்</strong></p>
<p>உடுமலை, டிச.23- உடுமலைபேட்டை ஒன்றியத்தில் வீடு கேட்டு மனு அளித்துள்ள விவசாய தொழிலா ளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி, தமி ழக அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கத்தின் உடுமலை ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்க உடுமலை ஒன்றிய 11 ஆவது மாநாடு செவ்வாயன்று எரிசனம்பட்டியில் நடைபெற் றது. சங்க ஒன்றியத் தலைவர் ரங்கராஜ் தலை மையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாவட் டச் செயலாளர் பஞ்சலிங்கம் துவக்கி வைத்து பேசினார். நீண்ட நெடுங்காலமாய் நிலம் (விடு தலைக்கு முன்னும் பின்னும்) என்னும் தலைப் பில் சங்க மாநில பொருளாளர் பழனிச்சாமி கருத்துரை வழங்கினார். விவசாயிகள்சங்க உடுமலை ஒன்றியத் தலைவர் பாலதண்ட பாணி வாழ்த்திப் பேசினார். ஊரக வேலை உறுதிச் சட்டத்தை விக்சித் பாரத் ஜி ராம்ஜி என மாற்றி, இந்த திட்டதை செயல் இழக்க செய்யும் புதிய சட்ட திருத் தத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி, தமிழக அரசின் வீடு வழங்கும் திட் டத்தில் வீடுகள் வழங்க வேண்டும், ஒன்றி யம் முழுவதும் சுகாதார சீர்கேடுகளை தடுக்க கூடுதல் தூய்மைப் பணியாளர்களை நிய மிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு: உடுமலை ஒன்றியத் தலைவராக ரங்க ராஜ், செயலாளராக கனகராஜ், பொருளாள ராக வஞ்சிமுத்து, துணைத்தலைவராக சுப்பு லட்சுமி, துணைச் செயலாளராக துரையர சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறை வாக ஒன்றிய துணைத் தலைவர் சுப்புலட் சுமி நன்றி கூறினார்.</p>
