தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பதவிக்காக யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்குக் கிடையாது! எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதில்!

8 Apr 2026, 5:30 am
பதவிக்காக யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்குக் கிடையாது! எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதில்!
<p><strong>பதவிக்காக யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்குக் கிடையாது! எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதில்!</strong></p><p>அரியலூர் / பெரம்பலூர், ஏப். 7- &quot;பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஓடி ஓடிப் போய் யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்குக் கிடையாது; சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாத எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் முரட்டு அடிமையாகச் செயல்படுகிறார்&quot; எனத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடினார்.</p><p>அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்துச் செவ்வாய்க்கிழமை அவர் எழுச்சிமிகு பிரச்சாரம் மேற்கொண்டார்.</p><p>ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கா.சொ.க. கண்ணனை ஆதரித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழுந்து தவழ்ந்து சென்ற புகைப்படத்தைத் கூட்டத்தில் காட்டினார். &quot;உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று எடப்பாடி கேட்கிறார். உண்மைதான், இவரைப் போலப் பதவிக்காக ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓபிஎஸ் என வரிசையாகக் காலில் விழுந்துவிட்டு, பின் அவர்களையே வாரிவிடும் அனுபவம் எனக்குக் கிடையாது.&quot;</p><p>&quot;இப்போது தில்லியில் மோடியின் காலைப் பிடித்துக் கொண்டு தமிழகத்திற்குள் பாஜகவை நுழைய வைக்கப் பார்க்கிறார். தமிழகத்தின் கல்வி நிதியான ரூ. 3,500 கோடியை முடக்கி, இந்தியைத் திணிக்கும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்&quot; என்றார்.</p><p>பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிடும் போக்குவரத்துத் துறை அமைச்சரும் திமுக வேட்பாளருமான எஸ்.எஸ். சிவசங்கரை ஆதரித்துப் பேசிய உதயநிதி, &quot;கடந்த கால அதிமுக ஆட்சியில் ஓட்டை உடைசல் டப்பாக்களாக இருந்த பேருந்துகளை மாற்றி, இன்று இந்தியாவே வியக்கும் வகையில் நவீனப் பேருந்துகளாக மாற்றியுள்ளார் அமைச்சர் சிவசங்கர்.&quot;</p><p>மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்றும், உயர்கல்வி பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு நவீன மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.