கேரள மாநில தேர்தல் பிரச்சாரத்துக்கான இரட்டை இலை சின்ன பதாகைகள் பறிமுதல்
26 Mar 2026, 2:46 pm
<p><strong>கேரள மாநில தேர்தல் பிரச்சாரத்துக்கான இரட்டை இலை சின்ன பதாகைகள் பறிமுதல்</strong></p>
<p>தேனி, மார்ச் 26- கேரள மாநில தேர்தல் பிரச்சாரத்துக் காக கொண்டு செல்லப்பட்ட இரட்டை இலைச் சின்னம் அச்சிடப்பட்ட ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள பதாகைகள் ஆண்டி பட்டியில் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி - மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழனன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்த ஒரு சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் கேரள மாநில நீர் வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் உருவப்படம் மற்றும் மலையாள மொழி யில் அச்சிடப்பட்ட ஆயிரக்கணக்கான தேர் தல் பிரச்சார பதாகைகள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அதில் இரட்டை இலைச் சின்னமும் அச்சிடப்பட்டிருந்தது. கேரளாவில் உள்ள கட்சியில் இரட்டை இலை சின்னம் இருந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். இதனைத் தொட ர்ந்து வண்டியில் வந்தவர்களிடம் விசாரித்த னர். இதில், மதுரையில் அச்சிடப்பட்ட பதா கைகள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பிரச்சாரத்துக்காக கொண்டு செல்லப்படு வது தெரியவந்தது. கேரளாவில் இடது ஜன நாயக முன்னணி கூட்டணியில் உள்ள கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியின் சின்னம் இரட்டை இலை ஆகும். ஆகவே அச்சின் னம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இருப்பினும் இந்தப் பதாகைகளை கொண்டு செல்வதற்கான உரிய ஆவ ணங்களோ அல்லது தேர்தல் ஆணையத் தின் அனுமதியோ வாகனத்தில் இருந்த வர்களிடம் இல்லை. இதையடுத்து, சுமார் ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள தேர்தல் பதாகை களையும், இதனை கொண்டு வந்த வாக னத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப் பட்டன. தமிழகத்தில் அதிமுகவின் அடையாள மான இரட்டை இலை சின்னம் பொறித்த பதாகைகள் கேரள மாநிலத் தேர்தலுக்காக கொண்டு செல்லப்பட்டபோது பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>
