முந்தய பக்கம்

பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலகாயம்

10 Apr 2026, 5:30 am
பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலகாயம்
<p><strong>பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலகாயம்</strong></p><p>தருமபுரி, ஏப்.9- மாரண்டஅள்ளி சாலையில் தனியார் பள்ளி வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>தருமபுரி மாவட்டம் கிரிதட்டஅூர் கிராமத்தைச் சேர்ந்த அருண் (27), கோவரசு (20) மற்றும் வினோத் குமார் (28) ஆகியோர் கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.</p><p>மாரண்டஅள்ளி-அ.மல்லாபுரம் சாலையில் வந்தபோது, தனியார் பள்ளி வாகனம் மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இதில் கோவரசு மற்றும் வினோத் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அருண் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p>இச்சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram