பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலத்த காயம்
10 Apr 2026, 5:30 am
<p><strong>பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலத்த காயம்</strong></p><p>தருமபுரி, ஏப். 9- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பாலக்கோடு அருகே உள்ள கரிக்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (20), நண்பர் கிருஷ்ணகிரி மாவட்டம், பனகட்டு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் மகன் வினோத்குமார் (28) ஆகிய இருவரும், சிவகாசி கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.</p><p>அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
