கிரிமினல் வழக்குகளில் தவெக எம்எல்ஏ-க்கள் முதலிடம் ஏடிஆர் அறிக்கை அதிர்ச்சி தகவல்
11 May 2026, 10:42 pm
<p><strong>கிரிமினல் வழக்குகளில் தவெக எம்எல்ஏ-க்கள் முதலிடம் ஏடிஆர் அறிக்கை அதிர்ச்சி தகவல்</strong> </p><p>சென்னை, மே 11- தமிழ்நாடு 17-ஆவது சட்டமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் குற்றப்பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பான ஏ.டி.ஆர். ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p> அதில் 233 எம்.எல்.ஏக்களில் 54 சதவிகிதத்தினர் அதாவது 126 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>கட்சிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக தவெக-வின் 107 எம்.எல்.ஏக்களில் 41 பேர் வழக்குகளில் சிக்கியுள்ளனர். மேலும், 107 எம்.எல்.ஏக்களில் 56 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>அதில் தவெக சார்பில் 19 பேர், அதிமுக சார்பில் 14 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர் கடுமையான வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். </p><p>இவர்களில் 2 பேருக்கு எதிராக கொலை வழக்கும், 6 பேருக்கு எதிராக கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p>
