தவெக-வினர் மீது லஞ்சப் புகார் அளித்த செங்கல் சூளை உரிமையாளர் மீதும் வழக்கு
28 May 2026, 9:47 pm
<p><strong>தவெக-வினர் மீது லஞ்சப் புகார் அளித்த செங்கல் சூளை உரிமையாளர் மீதும் வழக்கு</strong></p><p>வேலூர், மே 28 - பணம் கேட்டு மிரட்டியதாக தவெக முன்னாள் நிர்வாகி மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>வேலூர் மாவட்டம், கண்ணி யம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் சில செங்கல் சூளை உரிமை யாளர்களிடம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் வழங்க வேண்டும் என தவெக-வின் கண்ணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் (குற்றச்சாட்டை அடுத்து, தற்போது பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் சிலர் இணைந்து கண்ணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த னர்.</p><p> ஆனால் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. </p><p>ஆகையால், போலீசாரின் இந்த செயலைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை (மே 25) அன்று கண்ணியம்பாடி பேருந்து நிலையம் அருகே செங்கல் சூளை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p> சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், போராட்ட க்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோட்டாட்சியர் தலைமை யில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர். </p><p> இதன் அடிப்படையில் கோட்டாட்சியர் செந்தில்குமார், இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டார்.</p><p> ஆனால், அதன் பின்னரும் நடவடிக்கை எதுவும் இல்லாததால், காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் அறிவித்தனர். </p><p>மறுபுறத்தில், தவெக நிர்வாகி விஜயகுமாருக்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.</p><p> இதனிடையே, செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம், அளித்த புகாரின் பேரில் விஜயகுமார், லோகேஷ், ஈஸ்வரன் ஆகிய மூவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p> அதேபோல், விஜயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் செங்கல் சூளை உரிமையாளர்கள் சண்முகம், ரமேஷ், சுனில் ஆகியோர் மீதும் வழிமறித்து மிரட்டியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.</p>
