எடப்பாடியில் தவாக வேட்பாளர் மாயம்: ஆடியோ சர்ச்சை; வேட்புமனு நிராகரிப்பு
8 Apr 2026, 5:30 am
<p><strong>எடப்பாடியில் தவாக வேட்பாளர் மாயம்: ஆடியோ சர்ச்சை; வேட்புமனு நிராகரிப்பு</strong></p><p>சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு பரிசீலனை பணிகள் செவ்வாயன்று தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.</p><p>அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அருண்குமார் காணாமல் போயுள்ளதாகக் கூறி, அக்கட்சியின் தொண்டர்கள் எடப்பாடி அலுவலகம் முன்பு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதற்கிடையே, வேட்பாளர் அருண்குமார் பேசியதாகக் கூறப்படும் ஒரு ஆடியோ வெளியானது. அதில், "தன்னுடைய வேட்பு மனுவை திரும்பப் பெறும்படி அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும்" அவர் கூறியதாகத் தகவல் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
