முந்தய பக்கம்

தென் மண்டல கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்!

11 Aug 2026, 10:13 pm
தென் மண்டல கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்!
<p><strong>தென் மண்டல கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்!</strong></p><p>தூத்துக்குடி, ஆக.11 -தேனியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி சாம்பியன் பட்டத்தைவென்றது.</p><p>தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் தென் மண்டல சீனியர் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, தேனிமாவட்ட விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்கள் நடந்தன.</p><p>இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 90 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், தேனி மாவட்ட அணியும் தூத்துக்குடி வஉசி துறைமுக அணியும் மோதின.இந்தப் போட்டியில் 93-47 என்ற புள்ளிக் கணக்கில் வஉசி துறைமுக அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைவென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தேனி எல்.எஸ் மில் அதிபர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றஅணிக்கு கோப்பையை வழங்கினார்.</p><p>சாம்பியன் பட்டம் வென்ற அணி வீரர்கள், பயிற்சியாளரும் துறைமுக சபை உறுப்பினருமான சத்யாஆகியோருக்கு வஉசி துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித், துணைத் தலைவர் ராஜேஷ் சவுந்தர்ராஜன் ஆகியோர்பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram