ஈரானின் அமைதித் திட்டத்தை நிராகரித்த டிரம்ப் எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடியில் சிக்கும் உலகப் பொருளாதாரம்
12 May 2026, 10:33 pm
<p><strong>ஈரானின் அமைதித் திட்டத்தை நிராகரித்த டிரம்ப் எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடியில் சிக்கும் உலகப் பொருளாதாரம்</strong></p><p>வாஷிங்டன், மே 12- ஈரான் சமர்ப்பித்த அமைதித் திட்டத்தை சில மணி நேரங்களிலேயே டிரம்ப் நிராகரித்துள்ளார். </p><p>இதனால் மீண்டும் போர்ப் பதற்றம் அதி கரித்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் துங்கியுள்ளது. </p><p> இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் தீவிர நெருக்கடிக்குள் செல்லும் என அச்சம் எழுந்துள்ளது. </p><p>அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரான் மீது தொடுத்த போரினால், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. </p><p>இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><p> இதனால் உலக நாடுகளின் எண்ணெய்ச் சேமிப்பும் அந்நியச் செலாவணியும் விரைவாக கரைந்து பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது.</p><p> இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் அது உலக நாடுகளின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. </p><p>ஆனால் டிரம்ப் அமைதியை விரும்பாமல் ஈரானின் முன்மொழிவு எனக்குப் பிடிக்கவில்லை என அமைதித் திட்டத்தை நிராகரித்துள் ளார். </p><p>அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானுக்கு ஏற்பட்ட பாதிப்பு களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும். </p><p>ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் இறையாண்மையை அங்கீ கரிக்க வேண்டும். </p><p>ஈரான் மீதான அமெரிக்காவின் அனைத்துப் பொரு ளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும். </p><p>அமெரிக்காவால் முடக்கப் பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.</p><p> லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என ஈரான் தனது அமைதி முன்மொழிவு திட்டத்தில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. </p><p>இதுகுறித்து ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், “பேச்சுவார்த்தை என்பது சரணடைவ தல்ல; ஈரான் தனது உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். </p><p>ஈரான் மீதான அமெரிக்காவின் போரால் எரிபொருள் மட்டுமல்லாது, உரங்களின் விநியோகமும் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதல் உணவு உற்பத்தி குறையும் என்ற அச்சம் நிலவுகிறது.</p>
