திருச்சி-திருப்பதி பகல்நேர ரயில்: துரை வைகோ எம்.பி., வரவேற்பு
9 May 2026, 10:49 pm
<p><strong>திருச்சி-திருப்பதி பகல்நேர ரயில்: துரை வைகோ எம்.பி., வரவேற்பு</strong> </p><p>சென்னை, மே 9- திருச்சி - திருப்பதி இடையே பகல் நேர ரயில் சேவைக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஒப்பு தல் அளித்துள்ளதை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வரவேற்று உள்ளார்.</p><p> குண்டூர்-திருப்பதி இடையே இயங்கும் பகல் நேர ரயில் சேவை இனி திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்கப்படும். </p><p>திருச்சி - குண்டூர் - திருப்பதி வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படும். </p><p>திருப்பதி செல்லும் பக்தர்கள், மாண வர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.</p><p> ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்ததுடன் 2025 மார்ச் மற்றும் டிசம்பரிலும், 2026 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும் தொடர்ந்து கடி தங்கள் மூலம் வலியுறுத்தியதன் விளைவாகவே இந்த ஒப்புதல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>
