தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டா நிலத்திற்கு அளவீடு செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்படும் பழங்குடியின மக்கள்

10 Mar 2026, 5:48 pm
பட்டா நிலத்திற்கு  அளவீடு செய்து கொடுக்காமல்  அலைக்கழிக்கப்படும் பழங்குடியின மக்கள்
<p><strong>பட்டா நிலத்திற்கு &nbsp;அளவீடு செய்து கொடுக்காமல் &nbsp;அலைக்கழிக்கப்படும் பழங்குடியின மக்கள்</strong></p> <p>கடலூர், மார்ச் 10 - விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றி யத்திற்கு உட்பட்ட வி.சாத்தமங்கலம் கிரா மத்தில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு இலவச மனை பட்டா குடிமனை பட்டா வழங்கிட கோரியும், &nbsp; கடந்த 2024 ஆம் ஆண்டு சாத்தமங்கலத்தில் உள்ள பழங்குடி மக்கள் 10 நபர்களுக்கு ராஜேந்திர பட்டி னம் கிராமத்தில் இலவச மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் வீடு கட்டுவதற்காக பி.எம் ஜென்மன் வீடு கட்டும் திட்டத்தில் மூல மாக வீடுகள் &nbsp;கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டது. பட்டா கொடுக்கப்பட்ட இடத்தினை &nbsp;அளவீடு செய்து கொடுக்கா மல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. உடனடியாக அளவீடு செய்து கொடுக்கக் கோரியும் செவ்வாய்க்கிழமை &nbsp;விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவல கத்தில் பழங்குடி மக்கள் நல சங்கத்தின் சார்பில் &nbsp;மாவட்ட செயலாளர் என்.எஸ்.அசோகன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது . இதில் விருத்தாசலம் வட்டாட்சியர் பிரகாஷ் மனுவைப் பெற்றுக் கொண்டு 10 நாட்களுக்குள் &nbsp;கோரிக்கையை நிறை வேற்றி தருவதாக உறுதியளித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஆர். கலைச்செல்வன், ஒன்றிய குழு உறுப்பி னர் எஸ்.கனகராசு, பழங்குடி சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் &nbsp;அம்சவள்ளி, &nbsp;மாவட்டக்குழுஉறுப்பினர் அனிதா, உள்ளிட்ட &nbsp;பொதுமக்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.