தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

31 Dec 2025, 3:37 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>ரயில் டிக்கெட் முன்பதிவு: &nbsp;3% கட்டணச் சலுகை</strong></p> <p>சென்னை, டிச.31 &ndash; எண்மப் (Digital) பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், &lsquo;ரயில்ஒன்&rsquo; செயலி மூலம் முன்பதிவில்லா பயணச்சீட்டு எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இந்தச் சலுகை ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.<strong> </strong></p> <p><strong>உள்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம்: செல்வப்பெருந்தகை</strong></p> <p>சென்னை, டிச.31 &ndash; காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விவகாரங்களை கூட்டணி கட்சிகளோ அல்லது மற்ற கட்சிகளோ பெரிதுபடுத்த &nbsp;வேண்டாம் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ, பாஜகவுக்கு ஆதரவாகவோ யாராவது பேசினால் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.<strong> </strong></p> <p><strong>6-வது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் </strong></p> <p>சென்னை, டிச.31 &ndash; சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் 6-வது நாளை எட்டியுள்ளது. கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராடி வருகின்றனர்.</p> <p><strong>கல்வி நிதியை விடுவிக்க &nbsp;கனிமொழி எம்பி வலியுறுத்தல்</strong></p> <p>சென்னை, டிச.31 &ndash; தமிழக மாணவர்களுக்குச் சேர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதில் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து &nbsp;ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துக்குப் பதிலடியாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p> <p>&nbsp;<strong>தச்சங்குறிச்சியில் 2026-இன் முதல் ஜல்லிக்கட்டு</strong> &nbsp;</p> <p>சென்னை, டிச.31 &ndash; &nbsp;2026-ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 3-ஆம் தேதி இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.&nbsp;</p> <p><strong>&ldquo;66 லட்சம் வாக்காளர்கள் முகவரியற்றவர்களா?&rdquo; &nbsp; தேர்தல் ஆணையத்திற்கு ப.சிதம்பரம் கண்டனம் </strong></p> <p>&nbsp;சிவகங்கை, டிச.31 &ndash; &nbsp;தமிழகத்தில் 66 &nbsp;லட்சத்திற்கும் அதிக மானோரை &lsquo;முகவரியற்ற வர்கள்&rsquo; எனப் புதிய பிரிவின் கீழ் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ள தேர்தல் ஆணையத்தின் நட வடிக்கைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். காரைக்குடியில் புத னன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், &ldquo;வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்குவதில் தவறில்லை. ஆனால், பீகார் அல்லது மேற்கு வங்கத்தில் இல்லாத &lsquo;முகவரியற்றவர்கள்&rsquo; என்ற புதிய முறையைத் தமிழ கத்தில் மட்டும் அறிமுகப் படுத்தி 66,44,881 பேரை &nbsp;நீக்கியிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. &nbsp;கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 7.5 லட்சம் பேர் தங்களைத் தவறாக நீக்கியுள்ளதாக மனு அளித்துள்ளனர். &nbsp;இது தேர்தல் ஆணை யத்தின் தவறை அவர்களே நிரூபிப்பதாக உள்ளது&rdquo; என்றார். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இத்தகைய சூழ்ச்சி களை முறியடிக்க வேண்டும் என்றும், விடுபட்டவர்களை மீண்டும் சேர்க்க திமுக - காங்கிரஸ் கூட்டணி தீவிர மாகச் செயல்பட்டு வருவ தாகவும் அவர் குறிப்பிட்டார்.</p> <p><strong>2026-இல் விண்வெளித் துறையில் பல சாதனைகள் &nbsp;இஸ்ரோ தலைவர் தகவல்</strong></p> <p>&nbsp;சென்னை, டிச.31 &ndash; &nbsp;2026-ஆம் ஆண்டு இந்திய விண்வெளித் துறையில் மிக முக்கியமான ஆண்டாக அமையும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். ககன்யான் திட்டத்திற்கான முதற்கட்ட சோதனை முயற்சியாக, &lsquo;வியோமித்ரா&rsquo; என்ற பெண் ரோபோவுடன் கூடிய ஆளில்லா ராக்கெட் இந்த ஆண்டில் ஏவப்பட உள்ளது. மேலும், &nbsp;பிஏஎஸ்எல்வி சி-62 மற்றும் ஓசோன்சாட்-3ஏ போன்ற முக்கிய செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.</p> <p><strong>நிறைவடைந்தது வடகிழக்கு பருவமழை: இயல்பை விட 3% குறைவு</strong></p> <p>சென்னை, டிச.31 &ndash; தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் சராசரியாக 42.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது, இது இயல்பான அளவை விட 3 சதவீதம் குறைவாகும். சென்னையில் 10 சதவீதம் மழை குறைவாகப் பதிவாகியுள்ள நிலையில், நெல்லையில் இயல்பை விட 95 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. ஜனவரி இரண்டாம் வாரம் வரை லேசான மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <p><strong>மின்சார பேருந்து வரி விலக்கு நீட்டிப்பு: அரசுக்கு நன்றி </strong></p> <p>சென்னை, டிச.31 &ndash; மின்சார பேருந்துகளுக்கான சாலை வரி விலக்கை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிர மாநிலத்தைப் போலவே தமிழகத்திலும் மின்சார ஆம்னி பேருந்துகளுக்குச் சுங்கக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் எனச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p> <p><strong>சிபிஎஸ்இ பொதுத்தேர்வு &nbsp;தேதிகள் மாற்றம்</strong></p> <p>&nbsp;சென்னை, டிச.31 &ndash; &nbsp;நிர்வாகக் காரணங்களால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 11-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 10-ஆம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் மாற்றமின்றி நடைபெறும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.