தென்னக ரயில்வேயை கண்டித்து வணிகர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>தென்னக ரயில்வேயை கண்டித்து வணிகர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>நாகப்பட்டினம், பிப்.17- தென்னக ரயில்வே தொடர்ந்து நாகப்பட்டினம் பகுதியை புறக் கணித்து வருவதை கண்டித்து, நாகப் பட்டினம் வணிகர்கள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டமும், ரயில்வே சந்திப்பு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. காரைக்கால் - சென்னை ரயிலை முன்பு இருந்ததுபோல் எழும்பூர் வரை நீட்டிக்க வேண்டும். நாகப்பட்டினம் - தஞ்சாவூர் இருவழிப் பாதை அமைக்க வேண்டும். பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில் விட வேண்டும். வேளாங் கண்ணி, நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால், திருநள்ளாறு, பேரளம், மயிலாடுதுறை வழியாக ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.</p>
<p> </p>
