ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக விழிப்புணர்வு நிகழ்ச்சி
12 Mar 2026, 4:20 pm
<p><strong>ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக விழிப்புணர்வு நிகழ்ச்சி</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 12 - ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருச்சி சுங்கத் துறை கமிஷனரகம் இணைந்து, திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு முக்கிய வர்த்தக வசதி முயற்சிகளை விளக்கும் நிகழ்ச்சியை நடத்தின. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக கூட்ட அரங் கில் ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி சுங்கத் துறை ஆணையர் பாரத் பிரகாஷ் பங்கேற்று சுங்கத் துறை மேற்கொண்டுள்ள வர்த்தக வசதி நட வடிக்கைகள் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு விளக்கி னார். இந்தியாவின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் திருப்பூர் முக்கிய பங்காற்றி வருவதாகவும், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி சுமார் 70% திருப்பூரிலிருந்து நடைபெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய வர்த்தகத்தில் தற் போது பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் உருவாகி வருவதால் புதிய வாய்ப்புகள் உரு வாகும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக உருவாகும் சவால்கள் மற்றும் சுங்கத் துறையிடமிருந்து ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கும் ஆதரவு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் டீ சங்க துணைத் தலைவர் இளங்கோவன்; பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ஏஇபிசி கமிட்டி உறுப்பினர் ஆர்.ராமு, டீ இணைச் செயலாளர்கள் குமார் துரைசாமி, ஆனந்த், திருச்சி சுங்கத் துறை கூடுதல் கமிஷனர் விஜய் கிருஷ்ண வேலவன், இணை கமிஷனர் உமேஷ் ராதோட், உள்நாட்டு கண்டெய்னர் டிப்போ திருப்பூர் உதவி கமிஷனர் உன்னி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்றுமதியாளர்கள் பலர் பங்கேற்றனர். டீ இணைச் செயலாளர் குமார் துரைசாமி நன்றி கூறினார்.</p>
