பேரூராட்சி கணினி இயக்குநர்கள் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏவிடம் மனு
18 Jul 2026, 9:33 pm
<p><strong>பேரூராட்சி கணினி இயக்குநர்கள் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏவிடம் மனு</strong></p><p>நாகர்கோவில்,ஜூலை 18- பேரூராட்சிகளில் பணி புரியும் கணினி இயக்கு னர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் ஆர்.செல்லசுவாமி யிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு பேரூராட்சித் துறையில் 474 பேரூ ராட்சிகளில் புதிதாக உரு வாக்கப்பட்டுள்ள தட்டச்சு மற்றும் புள்ளி விவரத் தொ குப்பாளர் பணியிடங்களில், தற்போது கணினி இயக்கு பவர்களாகப் பணியாற்றி வரும் ஊழியர்களையே நியமித்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஊழியர் கள் மனு அளித்தனர். அம்மனுவை பெற்றுக் கொண்ட பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, கோ ரிக்கையை உரிய துறை யின் கவனத்திற்கு கொண்டு சென்று, தேவையான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்று கூறினார்.</p>
