தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்வாரியத் டெண்டர்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய குழுக்கள் அமைப்பு

30 May 2026, 9:33 pm
மின்வாரியத் டெண்டர்களில் வெளிப்படைத்  தன்மையை உறுதி செய்ய குழுக்கள் அமைப்பு
<p><strong>மின்வாரியத் டெண்டர்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய குழுக்கள் அமைப்பு</strong></p><p>சென்னை, மே 30 - தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் வழங்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந் தங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. </p><p>இனிவரும் காலங்களில் எந்தவொரு டெண்டரையும் வெளியிடுவதற்கு முன்பாக மூன்று குழுக்கள் கட்டாயம் ஆய்வு மேற்கொள்ள வேண் டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. </p><p>சந்தைப் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரி பார்ப்புக் குழு உள்நாட்டு சந்தை விலை நிலவரங் களை ஆய்வு செய்யும். </p><p>உற் பத்தியாளர் மதிப்பீட்டுக் குழு வெளிநாட்டு சந்தை நில வரங்களோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும்.</p><p> குறுக்கு சரிபார்ப்புக் குழு பிற மாநில மின்வாரியங்கள் இதே பொருட்களை என்ன விலைக்குக் கொள்முதல் செய்கின்றன என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கும். </p><p>முதல் இரண்டு குழுக் களின் அறிக்கைகள் கிடைத்த ஏழு நாட்களுக்குள் குறுக்கு சரிபார்ப்புக் குழு தனது இறுதி அறிக்கையை அளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. </p><p> ஏற்கனவே வெளியிடப் பட்டு இறுதி செய்யப்படாத டெண்டர்களும் இந்த மூன்று குழுக்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மின்வாரியம் உத்தர விட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.