முந்தய பக்கம்

நீண்டகாலமாக மறுக்கப்பட்டவர்களுக்குப் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்

16 Jun 2026, 10:59 pm
நீண்டகாலமாக மறுக்கப்பட்டவர்களுக்குப்  பணியிட மாறுதல் வழங்க வேண்டும்
<p><strong>நீண்டகாலமாக மறுக்கப்பட்டவர்களுக்குப் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்</strong></p><p>சென்னை, ஜூன் 16 - பணி இடமாறுதல் நீண்டகாலமாகக் கிடைக்காத கல்லூரி ஆசிரியர்களுக்குப் பணிமாறுதல் வழங்கும் வகையில் வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரி யர் கழகப் பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் கோரியுள்ளார். </p><p>அவரது அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள 188 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த அரசாணை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம், 2015-க்குப் பிறகு ஆசிரியர்களுக்கு அரசு முறையான இடமாறுதல் வழங்கவில்லை. ஒரு துறையில் 50 சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்கள் இருந்ததைக் காட்டியும், கௌரவ விரிவுரையாளர்கள் உள்ள இடங்களைக் கணக்கில் கொள்ளாமலும் இடமாறுதல் மறுக்கப்பட்டது. </p><p>தற்போது 2,708 நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால், காலியிடங்களுக்கு நிபந்தனையுமின்றி இடமாறுதல் வழங்க வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை உள்ள துறைகளில், புதியவர்கள் நியமிக்கப்பட்ட பின், இடமாறுதல் பெற்றவர்களை விடுவிக்கலாம் என்ற நிபந்தனையுடன் ஆணை வழங்கலாம். மேலும், 2 ஆண்டுகள் ஒரே கல்லூரியில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram