அரசு ஊழியர் சங்கத்தின் 43வது அமைப்பு தினம் திருவில்லிபுத்தூரில் கொடியேற்று விழா
6 May 2026, 9:23 pm
<p><strong>அரசு ஊழியர் சங்கத்தின் 43வது அமைப்பு தினம் திருவில்லிபுத்தூரில் கொடியேற்று விழா</strong></p><p>திருவில்லிபுத்தூர், மே 6- தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் 43வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, திருவில்லிபுத்தூரில் கொடியேற்று விழா நடைபெற்றது. </p><p>தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கம், அரசு ஊழியர்களின் நலன் மற்றும் உரிமைகளுக்காக 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. </p><p>இந்நிலையில், 42 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 43வது அமைப்பு தினம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.</p><p> அதன் ஒரு பகுதியாக, திரு வில்லிபுத்தூர் வட்டக் கிளை சார்பில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாகவும், நகராட்சி அலுவல கம் முன்பாகவும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. </p><p>விழாவிற்கு வட்டக் கிளை தலைவர் பி.பொன்ராஜ் தலைமை தாங்கினார். </p><p>வட்டக் கிளை செயலா ளர் பி.திருப்பதிராஜ் முன்னிலை வகித்தார். </p><p>நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு, சங்கக் கொடி யை பி.பொன்ராஜ் ஏற்றி வைத் தார். </p><p>அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனக் கொடியை, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலை வர் பி.பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். </p><p>நகராட்சி அலுவலகம் முன்பு, சாலை பணியாளர் சங்க கோட்டச் செயலாளர் தேவராஜ் கொடியேற்றினார். </p><p>இந்த நிகழ்ச்சியில் நெடுஞ் சாலைத்துறை மற்றும் நக ராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p> சாலை பணியாளர் சங்க நிர்வாகிகள் கோபால், ஆறு முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். </p><p>அமைப்பு தினத்தை முன் னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.</p>
