தவிச மாவட்ட மாநாடு: வரவேற்புக் குழு அமைப்பு!
16 Jul 2026, 10:19 pm
<p><strong>தவிச மாவட்ட மாநாடு: வரவேற்புக் குழு அமைப்பு!</strong></p><p>பொள்ளாச்சி, ஜூலை 16- பொள்ளாச்சியில் ஆகஸ்ட் 16 இல் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெறவுள்ள நிலையில், வர வேற்புக் குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 7 ஆவது கோவை மாவட்ட மாநாடு பொள் ளாச்சியில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் பொள் ளாச்சியில் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் எ.ஈஸ்வரன் தலைமை வகித்தார். இதில், ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று பொள்ளாச்சி புளி யம்பட்டி கோல்டன் மஹாலில் நடைபெற விருக்கும் மாவட்ட மாநாட்டை மிகச் சிறப் பான முறையில் நடத்த 20 பேரைக் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டு, அதற் கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தலைவராக செல்வகுமார், செய லாளராக ஸ்டாலின் பழனிச்சாமி, பொருளா ளராக ஈஸ்வரன் உள்ளிட்ட 20 பேர் தேர்வு செய் யப்பட்டனர்.</p>
