முந்தய பக்கம்

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

16 Mar 2026, 1:03 pm
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
<p>சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.<br /> தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், செம்மலர் ஆசிரியருமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு &lsquo;தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்&#39; நூலுக்காக 2025 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.&nbsp;<br /> இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:<br /> &quot;தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் &#39;தோழர்&#39; ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது பாராட்டுகள்!<br /> தாமதப்படுத்தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்திய அகாதமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்!&quot;<br /> இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram