அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
27 May 2026, 9:19 pm
<p><strong>அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்</strong></p><p>திருவாரூர், மே 27 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதி யர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு பேரவை திருவாரூர் மாவட்டம் செல்வி பிளாட்டினம் அரங்கில் நடைபெற்றது. </p><p>கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தீ.ச.வி.மூர்த்தி தலைமை வகித்தார். </p><p>கௌரவரத் தலைவர் மு.பரமேஸ்வரன் முன்னிலையில், மாவட்டத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.</p><p> மாநில பொதுச் செயலாளர் பா.ரவி வேலை அறிக்கை வாசித்தார்.</p><p> மாநிலப் பொருளாளர் வை.நாகராஜன் நிதி நிலை அறிக்கை வைத்தார். </p><p>கௌரவத் தலைவர் மு.பரமேஸ்வரன், நடவ டிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் இரா. சுப்ரமணியம் உரையாற்றினர். </p><p>ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வசந்தன் வாழ்த்துரை வழங்கினார். </p><p>மாநிலச் செயலாளர் எஸ்.புஷ்பநாதன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தணிக் கையாளர் சி.தமிழ்மணி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். </p><p>5 ஆம் மாநில பிரதிநிதித்துவப் பேர வையை 2026 செப்டம்பர் மாதம் தஞ்சா வூரில் நடத்துவது, புதிதாக பொறுப் பேற்றுள்ள அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்கள் தொடர்பான தேர்தல் கால வாக்குறுதிகளை விரைந்து நிறை வேற்ற வேண்டும். </p><p>குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும். </p><p>70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர் /குடும்ப ஓய்வூதி யர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். </p><p>ஊராட்சி செயலாளர்கள், சத்து ணவு-அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், வனக்கா வலர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட் டோருக்கு தமிழக அரசின் குறைந்த பட்ச ஓய்வூதியமான ரூ.7850/- வழங்க வேண்டும். </p><p>அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட நடவடிக்கை வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநிலச் செயலாளர் அ. கென்னடி பூபாலராயன் நன்றி கூறினார்.</p>
