திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம்!
15 May 2026, 5:17 pm
<p>திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று சாதி மறுப்பு காதல் திருமணம் நடைபெற்றது.</p><p>நிசாந்தினி மற்றும் கவியரசன் ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர். இந்நிலையில், சாதியைக் காரணம் காட்டிப் பெண் வீட்டார் இவர்களது திருமணத்திற்குச் சம்மதிக்க மறுத்துவிட்டனர். </p><p>இதையடுத்து இன்று, சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜோதிபாசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.பாலா, மாவட்டத் தலைவர் பா.ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இவர்களது திருமணம் நடத்திவைக்கப்பட்டது.<img src="https://v3.magazineallyapi.theekkathir.in/images/2026/05/5256a4a2-bdca-460e-9874-223b35200ee2.jpeg" /></p><p><br></p>
