குடிநீர் கோரி காலி தண்ணீர் தொட்டியுடன் பிரதனப் பிரச்சாரம்
20 Jul 2026, 11:59 pm
<p><strong>குடிநீர் கோரி காலி தண்ணீர் தொட்டியுடன் பிரதனப் பிரச்சாரம்</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 20– திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் உள்ள மேல்பாலானந்தல் கிராமத்தில் நீண்ட நாட்களாகக் குடிநீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர். குடிநீர் வழங்கக் கோரி மனு அளித்தால், கிராமத்தில் குடிநீர் வசதி சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பொய்யான தகவலை அளிப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர். இதனைக் கண்டித்தும், உடனடியாகக் குடிநீர் வழங்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் காலி தண்ணீர் தொட்டிகளுடன் வினோதமான முறையில் நூதனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.</p>
