தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழங்குடி மக்களின் வறுமை ஒழிப்பு நிதி முடக்கம் முதல்வர் தலையிட மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

12 May 2026, 1:54 am
பழங்குடி மக்களின் வறுமை ஒழிப்பு நிதி முடக்கம் முதல்வர் தலையிட மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை
<p><strong>பழங்குடி மக்களின் வறுமை ஒழிப்பு நிதி முடக்கம் முதல்வர் தலையிட மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை</strong></p><p>திருவள்ளூர், மே 11- திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கான வறுமை ஒழிப்பு சங்க நிதியை வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. </p><p>நிதியுதவியில் பாரபட்சம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 588 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களில், 512 பொது சங்கங்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான வெள்ள நிவாரண நலிவுற்றோர் நிதி தலா ரூ. 25,000 விடுவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஆனால், 28 பழங்குடி கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வரை இந்த நிதி வழங்கப்படவில்லை. </p><p>இதனால் பழங்குடி மக்கள் நுண் நிதி நிறு வனங்களிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கட்ட முடியாமல் சொந்த ஊரை விட்டும், அரசு வழங்கிய வீடுகளை விட்டும் வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. </p><p>தொடரும் உயிரிழப்புகள் இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கூறுகையில், &quot;கந்துவட்டி கொடுமையால் எல்லாபுரம் ஒன்றியத்தில் வேலு என்பவர் தற்கொலை செய்துகொண்டார். </p><p>பூனிமாங்காடு, கச்சூர் போன்ற பகுதிகளில் பல குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். </p><p>பலமுறை மனு அளித்தும் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் செல்வராணி இந்த நிதியை விடுவிக்க மறுத்து வருகிறார்&quot; என வேதனை தெரிவித்தனர்.</p><p> முதலமைச்சருக்குக் கோரிக்கை: எனவே, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இதில் உடனடியாகத் தலையிட்டு, திருக்கண்டலம், கச்சூர், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட 28 கிராமங்களில் முடங்கியுள்ள வறுமை ஒழிப்பு சங்கங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p> திட்ட இயக்குநரின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், பழங்குடியினருக்கான நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரியும் திங்களன்று (மே 11) மாவட்ட ஆட்சியர் மு.பிரதாபிடம் அவர்கள் மனு அளித்தனர். -பெ.ரூபன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.