மாநில அளவில் வாலிபால் போட்டியில் திருப்பூர் வழக்கறிஞர்கள் அணி முதலிடம்
25 Feb 2026, 3:22 pm
<p><strong>மாநில அளவில் வாலிபால் போட்டியில் திருப்பூர் வழக்கறிஞர்கள் அணி முதலிடம்</strong></p>
<p>திருப்பூர், பிப்.25 – நாகர்கோவிலில் கடந்த வாரம் நடைபெற்ற வழக்க றிஞர்களுக்கான மாநில அள விலான வாலிபால் போட்டி யில் திருப்பூர் வழக்கறி ஞர்கள் அணி வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை பெற் றது. நாகர்கோவில் வழக்கறி ஞர்கள் சங்கம் இந்த வாலிபால் போட்டியை அங்குள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தியது. சனி, ஞாயிறு இரு நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழகம் முழு வதும் இருந்து மொத்தம் 32 வாலிபால் அணிகள் பங்கேற்றன. இதில் திருப்பூர் அணி தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் பாண்டிச்சேரி அணியுடன் மோதி, வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை கைப்பற்றியது. உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முதல் பரிசுக்கான கோப்பையை திருப்பூர் வாலிபால் அணி வீரர்களுக்கு வழங்கினார். திருப்பூர் வாலிபால் அணி ஒருங்கி ணைப்பாளர்கள் ஆ.அமர்நாத், என்.ராம்பிரபு ஆகியோர் இத்தகவலை தெரிவித்தனர்.</p>
<p> </p>
<p> </p>
