வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு
4 Jun 2026, 10:23 pm
<p>திருப்பூர், ஜூன் 4-</p><p>திருப்பூர் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளபோதே, சர்வாதி</p><p>காரமாக வார்டு நியமன உறுப்பினர்களை நியமித்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியாழன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பதவியில் </p><p>இருக்கும் போதே, வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் என்று அலுவலர்களை நியமித்துள்ள திருப்பூர் மாநக</p><p>ராட்சி ஆணையாளரின் நடவடிக்கையை கண்டித்தும், உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடாது என்</p><p>றும், நியமிக்கப்பட்டுள்ள வார்டு ஒருங்கிணைப்பாளர்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மௌனிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இவ்வியக்கத்தில், சங்கத்தினர் மாவட்ட பொருளாளர் ஜி.சிந்தன், வடக்கு மாநக</p><p>ரச் செயலாளர் நவீன், மாவட்டச் செயலாளர் கு.பாலமுரளி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், திரளா</p><p>னோர் பங்கேற்றனர். இந்த நியமனத்தை ரத்து செய்யாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.</p>
