திருப்பூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை
19 Dec 2025, 6:05 pm
<p><strong>திருப்பூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை</strong></p>
<p>திருப்பூர், டிச. 19 – திருப்பூர் புத்தகத் திருவிழா ஜனவரி மாதம் நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற் பாடு பணிகள் பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங் கில் வியாழனன்று நடைபெற்ற இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமை ஏற்றார். மாவட்ட வரு வாய் அலுவலர் க.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மகாராஜ், வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ் மற் றும் நூலகத் துறை, கல்வித்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் இந்த விழாவை சிறப் பான முறையில் நடத்துவது என்றும், அதற் கான முன்னேற்பாடு பணிகள் பற்றியும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.</p>
