தேனி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
21 Mar 2026, 2:42 pm
<p><strong>தேனி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை</strong></p>
<p>தேனி, மார்ச் 21- தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடை பெற்ற ஈத் பெருநாள் ( ரம லான்) சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். ரமலான் மாதம் தொடங் கியதை அடுத்து கடந்த 30 நாட்களாக முஸ்லிம்கள் நோன்பு இருந்து வந்தனர். அப்போது தினமும் ஐவேளை தொழுகையும் தினந்தோறும் தராவிஹ் தொழுகை நடத்தி வந்தனர். கடைசி 10 நாட்களில் நள்ளி ரவில் கியாமுல் லைல் சிறப்பு தொழுகையையும் நடத்தி வந்தனர். நோன்பு காலங்க ளில், ஜக்காத் என்னும் தான தர்மங்களையும் ஏழை களுக்கு அதிகமாக செய்து வந்தனர். முப்பது நாட்கள் நோன்பு இருந்து முடித்த பின்பு சனிக்கிழமை ரம லான் பண்டிகை கொண்டா டப்பட்டது. கம்பம், பாளையம், கூடலூர், சின்னமனூர், போடி, தேனி, பெரிய குளம், ஆண்டிபட்டி, தேவ தானப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பள்ளி வாசல் ஜமாத்தைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்ட னர். தொடர்ந்து ஈத்கா மைதானத்திற்கு ஊர்வல மாக சென்று சிறப்பு தொழு கையில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.</p>
<p> </p>
