கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்!
7 Feb 2026, 2:02 pm
<p><strong>கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்!</strong></p>
<p>இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாடுபவர் கள் உண்மையில் வெட்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடுமை யாகச் சாடியுள்ளார். “இந்தியா - அமெரிக்கா நாடுகளுக் கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர் பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 18% வரிவிதிக்கும் என்றும் அமெரிக்கப் பொருட்கள் குறிப்பாக உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு வரி முற்றிலும் நீக்கப் படும் அல்லது குறைக் கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் பியுஷ் கோயல் தனது பதிவில் சோளம், கோதுமை, சோயா, அரிசி, பால், சில இறைச்சி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரி விக்கிறார். ஆனால், கூட்டறிக்கையில் wide range of உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கான வரி நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் ரஷ்ய எண்ணெய்யை வாங்க மாட்டோம் என ஒப்புக்கொண்ட தால்தான் 25% வரியை நீக்குகிறேன், எண்ணெய் வாங்குவது தெரியவந்தால் மீண்டும் வரிவிதிப்பேன் என தனது உத்தரவில் மிரட்டுகிறார் டிரம்ப். இந்தி யாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மா னிக்கும் அதிகாரத்தை டிரம்புக்கு வழங்கி னாரா பிரதமர் மோடி? இதை இந்தியாவுக்குச் சாதகமான ஒப்பந்தம் எனக் கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.</p>
