திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சிபிஎம் அலுவலகத்தில் வரவேற்பு
31 Mar 2026, 4:50 pm
<p><strong>திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சிபிஎம் அலுவலகத்தில் வரவேற்பு</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 31- திருச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செவ்வாய் அன்று வெண்மணி இல்லத்தில் சிபிஎம் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிகழ்வின் போது, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஸ்ரீதர், மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாநகர், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், சிஐடியுவினர், வெகுஜன அமைப்பினர் உள்பட பலர் உடனிருந்தனர். மேலும், இந்த சந்திப்பின்போது திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் வேட்பாளருடன் இருந்தார். நிர்வாகிகள் அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தனர்.</p>
