தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவனந்தபுரம் “திருப்புமுனை” அல்ல!

15 Dec 2025, 2:48 pm
திருவனந்தபுரம்  “திருப்புமுனை” அல்ல!
<p><strong>திருவனந்தபுரம்&nbsp; &ldquo;திருப்புமுனை&rdquo; அல்ல!</strong></p> <p>கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களைப் பெற்றது, பிரத மர் மோடியால் &ldquo;புதிய சகாப்தத்தின் துவக்கம்&rdquo; என்றும், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் சசி தரூரால் &ldquo;வரலாற்றுச் செயல்பாடு&rdquo; என்றும் முழங்கப்படுகிறது. ஆனால், இந்த வெற்றியைப் பிரமாண்டப்படுத்தும் அவர்களது கூற்றுக்கும், நிஜமான தேர்தல் தரவுகளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.</p> <p>மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. சுட்டிக்காட்டியபடி, தரவுகளை ஒப்பிடுவது இந்த &ldquo;வரலாற்று&rdquo; முழக்கத்தின் காற்றை ஒரு நொடியில் நீக்கிவிடும்; திருவனந்தபுரத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற மொத்த வாக்குகள் 2,13,214. 2025 உள்ளாட்சித் தேர்தலில் இது 22.1% குறைந்து 1,65,891 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதே காலகட்டத்தில், இடது ஜனநாயக முன்னணி (LDF) பெற்ற வாக்கு கள் 1,29,048-இலிருந்து 29.8% உயர்ந்து 1,67,522 ஆக அதிகரித்துள்ளது.</p> <p>திருவனந்தபுரம் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை எதிர்கொண்டது காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) தான். அதன் வாக்குகள் 1,84,727-இலிருந்து 31.8% வீழ்ச்சியடைந்து 1,25,984 ஆகக் குறைந்தது.</p> <p>வெளியே தெரிந்த வெற்றிச் செய்தியை மட்டும் வைத்து, திருவனந்தபுரத்தில் உள்ளா ட்சித் தேர்தலில் பாஜக கூடுதல் இடங்களைப் &nbsp;பிடித்ததை &ldquo;வரலாற்றுச் சாதனை&rdquo; எனச் சசி தரூர் பாராட்டுவது, சுயபரிசோதனைக்குத் &nbsp;தயாராக இல்லாத அவரது கட்சியின் தோல்வி &nbsp;மனப்பான்மையையே காட்டுகிறது. தனது கோட்டை என யுடிஎப் கருதும் திருவனந்த புரத்தில் தமது வாக்குகள் 32% படுவீழ்ச்சி அடைந் ததைப் பற்றிப் பேசாமல்,அந்த இடங்களில் ஒரு பகுதி பாஜகவுக்கு போனதை வியந்து போற்றுவது என்ன அரசியல்?&nbsp;</p> <p>பிரதமர் மோடியின் &ldquo;திருப்புமுனை&rdquo; என்ற &nbsp;கூற்றும் எடுபடாது. ஒரு கட்சி தனது முந்தைய வாக்குகளிலிருந்து 22% இழந்தால், அது எப்படி ஒரு &ldquo;புதிய சகாப்தத்தின் துவக்கம்&rdquo; ஆக &nbsp;முடியும்? பாஜகவின் பலம் கூடியதால் அல்ல, பிரதான எதிர்த்தரப்பின் பலவீனம் தந்த இலவசம் இது.</p> <p>திருவனந்தபுரத்தின் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், கேரளத்தில் ஒரு &ldquo;திருப்புமுனை&rdquo; அல்ல; மாறாக, காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப்பின் வியூகத் தோல்வியின் விளைவாக, பாஜகவால் தற்காலிகமாக அறுவடை செய் யப்பட்ட ஒரு சம்பவமே. இந்தத் தரவுகளைப் புறக் கணித்துவிட்டு, &ldquo;வரலாற்றுச் சாதனை&rdquo; எனப் பிரச்சாரம் செய்வது, கேரள அரசியலின் உண் மையான காட்சியைக் குலைக்கும் முயற்சி ஆகும். இந்த மாய வலைக்குப் பலியாகாமல், இடதுசாரி ஜனநாயக சக்திகள் யுடிஎப்பின் வீழ்ச்சியை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்வதே காலத்தின் தேவை. அதை நிச்சயம் அவர்கள் செய்வார்கள்.<br /> &nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.